வணக்கம்.

தமிழ் தேசியம், மொழி, இனம் ஆகியவற்றை காக்கத் தவறிய தமிழக தலைவர்களின் மத்தியில், தமிழனின் வீரத்தை சம காலத்தில் உலகறியச் செய்து, தமிழ் இனத்தைப் பெருமை படுத்திய தமிழின தேசியத் தலைவரின் கொள்கைகளை பின்பற்றி நமது மொழியின் சிதைவையும், இனத்தின் பிளவையும் ஒன்றுபடுத்தி, தலைவரின் வழி நின்று, வென்று எடுப்போம்.

கௌரவமான அடிமைகள்

0

Posted on : 9:09 AM | By : ஓவியம்

மக்களுக்கு சேவை செய்ய எவ்வளவு அமைப்புகள் நாட்டில் இருந்தாலும். காவல் துறையே சிறந்தது என்று படித்து பட்டம் பெற்று. பல ஆண்டுகள் பயிற்சி எடுத்து உண்மையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்து இங்கு வருபவர்களை பதவி, பட்டம், கண்ணியம் மிகுந்த உடை ஆகியவற்றை களைந்து அம்மணமாக்கி, கேவலபடுத்தும் படிப்பு அறிவு இல்லாத அரசியல்வாதிகளின் பிடியில் அவர்களின் நிலை

ஆளும் அரசுகளின் கோபம். மாவட்ட ஆட்சியரிடம் இருந்து தாவி. பிறகு IPS அதிகாரியிடம் இருந்து மாறி. கடைசியாக காவல்துறையிடமிருந்து மக்களுக்கு வருகிறது. இவர்களின் கோபங்களுக்கு மக்களின் பிணங்களே மிச்சம். பிறகு அதே மந்திரியின் தலைமையில் விசாரணை கமிட்டி. எதிர்கட்சிகள் வழக்கம்போல் வெள்ளை அறிக்கை கேட்பார்கள். (வெற்று தாளை சமர்பிப்பதே வெள்ளை அறிக்கை) இதுவரை இறந்தவர்களுக்கு நீதி கிடைக்கிறதோ இல்லயோ. நீதி கிடைத்துவிடும் ஒரு இரங்கலுடன்.

சமூகத்தின் நச்சு உற்றாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் மிரட்டல்களின் உருவம் காவல் துறையின் வடிவில் ஏவப்படுகிறது. பிறகு கட்டபஞ்சாயத்து முதல் பன்னாட்டு நிறுவனங்களை மிரட்டுவதுவரை நீடிக்கிறது. சமீபத்தில் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் ஒரு அமைச்சர் அருகே இருந்தும் அனாதையாக இறந்துபோன அதிகாரி நிலை பற்றி யோசித்தோமா. இல்லை. தங்களின் கருத்தை உரிமையாக சொல்லகூடாத ஒரே துறை இதுதான். சொன்னால் மேற்கொண்டதே நடக்கும்.

மக்களின் பகலவனாய் செயல்படவேண்டிய காவல்துறையை பகடைகாயாக பயன்படுத்தும் அரசியல் சமூக விரோதிகளை ஒழித்தால்தான் நமக்கு வெளிச்சம் கிடைக்கும்.

சீற்றத்தின் செய்தி
நாட்டில் நடக்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சதி செயலின் பின்னணியை விசாரித்தல் கடைசியாக அது வந்து நிற்குமிடம் எதாவது ஒரு கட்சியாகத்தான் இருக்கும். ஆகவே இந்த நிலை தொடராதிருக்க சீரழிந்த நிலையில் கேட்பாரற்று கிடக்கும் காவல்துறையை தனிச்சையாக செயல்படவைத்து .முதல் கட்ட நடவடிக்கையாக அரசியல்வாதிகள் அனைவரையும் சீர்திருத்த பள்ளியில் சேர்த்து அவர்களின் மங்கிய அறிவை மலரசெய்தால்தான் இவர்களின் பணி மக்களுகாக தொடரும்.....

Share this :

  • Stumble upon
  • twitter

Post a Comment