வணக்கம்.

தமிழ் தேசியம், மொழி, இனம் ஆகியவற்றை காக்கத் தவறிய தமிழக தலைவர்களின் மத்தியில், தமிழனின் வீரத்தை சம காலத்தில் உலகறியச் செய்து, தமிழ் இனத்தைப் பெருமை படுத்திய தமிழின தேசியத் தலைவரின் கொள்கைகளை பின்பற்றி நமது மொழியின் சிதைவையும், இனத்தின் பிளவையும் ஒன்றுபடுத்தி, தலைவரின் வழி நின்று, வென்று எடுப்போம்.

சென்ற வாரம் ஏற்றிய தேசிய கொடிக்கு.....

0

Posted on : 4:15 PM | By : ஓவியம்

சுதந்திர தினத்தன்று எடுத்த சபதம், கொடுத்த வாக்குறுதி இவை அனைத்தும் வரும் ஆண்டில் வழக்கம்போல் மறுபதிப்பு செய்யப்படும்வரை நம்மைப்போல அனாதையாகிவிட்ட நமது தேசிய கொடிக்கு செய்தி.

செய்தி 1:
உன்னை போற்றி ஏற்றிய காங்கிரசின் சொத்து மதிப்பு 614 கோடி என்று வருமான வரி கணக்கு அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. 2002-2003 இதன் மதிப்பு 57 கோடியாக இருந்தது. இதன் வளர்ச்சி உனக்கு மகிழ்ச்சி என்றால் எங்களுக்கும் மகிழ்ச்சி. இந்த நிலைமை நீடித்தால் உனக்கு கீழ் இருக்கும் இடமே எங்களுக்கு விரைவில் சொந்தமாகிவிடும்.

செய்தி 2:
அமெரிக்காவின் நியூஸ் வீக் பத்திரிகை உலகின் முக்கிய 10௦ தலைவர்களின் பட்டியலில் முதல் இடம் இந்திய பிரதமருக்கு வழங்கபட்டுள்ளது. கொடுத்த காரணம் கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் மற்றும் "தலைவர்களை நேசிக்கும் தலைவர்". என்றும் வழங்கபட்டுள்ளது. மிக சரியான தேர்வு.

உலகில் மக்களை நேசிக்கும் தலைவர்களை பற்றி கேள்விப்பட்டதுண்டு. அது என்ன "தலைவர்களை நேசிக்கும் தலைவர்" உனக்கு புரியவில்லையா? முதலாளி முதலாளிகளை நேசிக்கிறார். இவர் நேசிக்கும் முதல் தலைவர் அவருடைய கட்சி தலைவர் மற்றொருவர் நம் முதலாளி. (இருவரும் இந்தியர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)

செய்தி 3:
100 உலக சிறந்த இந்தியா 10 வது சிறந்த நாடு இந்தியா. இந்த மதிப்பெண்ணும் "நியூஸ் வீக்" பத்திரிகையே வழங்கி உள்ளது. எதில் என்று புரியவில்லை.

அறிவார்ந்த நியூஸ் வீக் பத்திரிக்கையே இவர்களுடன் சேர்ந்து உனது அறிவை எங்கு விற்றாய். இவர்களாவது உன்னிடம் விற்றார்கள். நீ யாரிடம் விற்றாய். உன்னுடைய பாராட்டு கோமாளிகளுக்கு புரியாமல் இருக்கலாம். கல்வி, சுகாதாரம், தரமான வாழ்வு அளித்தல், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கினால் நாடு மட்டும் ஏன் உலகில் 78 வது இடம்? இதைவிட மாபெரும் சிரிப்பு இலங்கை 66 ஆம் இடத்தில் இருகின்றதாம்....

சீற்றத்தின் செய்தி:
படித்த காலத்தில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கி முதற் மதிப்பெண் பெற்ற நன்றி கடனுக்கு கட்சியின் சொத்து மதிப்பை அதிகப்படுத்தியும், கட்சி தலைவரின் கை அசைவில் செயல்படும் சாவி பொம்மையாக இருப்பதற்கும். இதர மாநிலங்களின் பிரச்சனைகளை பற்றி கவலைபடாத இவருக்கு இந்தியாவில் கூட இல்லை டெல்லியில் மட்டுமே முதலிடம். காரணம் அங்குதான் முதலாளியும் இருக்கிறார். பன்னாட்டு முதலையும் வருவார்கள்.

Share this :

  • Stumble upon
  • twitter

Post a Comment